திண்டிவனம் அருகே இரு தரப்பினர் மோதல் 11 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் 11 பேர் மீது வழக்கு

Update: 2024-07-04 05:38 GMT

வழக்கு

திண்டிவனம் அடுத்த பாம்பூண்டி காலனியைச் சேர்ந்தவர் மூர்த்தி, 50; இவர், தனது வீட்டின் முன் கடந்த 30ம் தேதி மாலை தனது மருமகளுடன் நின்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த, திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்துார் தங்கதுரை மகன் லோகேஷ், 20; கதிரேசன் மகன் மணிகண்டன், 20; ஆகியோரை கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், வெண்மணியாத்துார் லோகேஷ், மணிகண்டன், அவரது தம்பி ராகுல், 19; மணவாளன் மகன் பாவேந்தன், 20; வேல்முருகன் மகன் குமார், 23; பாம்பூண்டி காலனியைச் சேர்ந்த அருள், 50; வசந்த், 22; கோகுல், 18; அகிலன், 20; ஆறுமுகம், 30; சத்யா, 25; ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News