பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு;
By : King 24x7 Angel
Update: 2024-02-05 04:48 GMT
பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
கச்சிராயபாளையம் அடுத்த பரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராம் மனைவி செந்தமிழ்ச்செல்வி, அதே ஊரைச் சேர்ந்தவர் பிரகாஷ், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. கடந்த ஜனவரி 27ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், செந்தமிழ்ச்செல்வியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். கச்சிராயபாளையம் போலீசார் பிரகாஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.