பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி அருகே பெண்ணைத் திட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-02-26 04:13 GMT

காவல்துறை விசாரணை 

கள்ளக்குறிச்சி அடுத்த வேளாக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி புவனேஸ்வரி, 37; இவர், கடந்த 19ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராயப்பன் மகன் மணிகண்டன், புவனேஸ்வரியின் வீட்டின் கதவைத் தட்டி, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News