மது போதையில் கத்தியால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

மானாமதுரை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்தி குத்து - போலீசார் விசாரணை.

Update: 2024-02-09 09:52 GMT

மது போதையில் கத்தியால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(36). இவர் முத்தரசன் அருகே உறவினர் அழகுபல்லவராஜா என்பவருடன் மது அருந்தி கொண்டிருந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறில் கத்தியால் தாக்கியதில் படுகாயம் அடைந்த காளீஸ்வரன்(36) சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் அழகுபல்லவராஜா(24) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News