பண பிரச்சினை காரணமாக தங்கைகளை தாக்கிய அண்ணன் மீது வழக்கு பதிவு

விருதுநகர் , இனாம் ரெட்டியபட்டி பகுதியில் தங்கைகளை தாக்கிய அண்ணன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-19 02:27 GMT

பண பிரச்சினை காரணமாக தங்கைகளை தாக்கிய அண்ணன் மீது வழக்கு பதிவு

விருதுநகர் இனாம் ரெட்டியபட்டி பகுதியைச் சார்ந்தவர் சுந்தரம்மாள் இவரது தங்கை மகாலட்சுமி சுந்தரமாலிடம் சென்னையில் வசிக்கும் அவருடைய அண்ணன் பழனிக்குமார் 80,000 கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது இதை பலமுறை கேட்டும் அவர் கொடுக்காததை அடுத்து காலம் தாழ்த்தி வந்ததாகவும் மகாலட்சுமியின் மகன் பட்டாசு வெடி விபத்தில் உயிர் இழந்த நிலையில் நிவாரணத் தொகை 10 லட்சம் அவருக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது அதிலிருந்து பழனிக்குமார் 4 லட்சம் ரூபாய் கடனாக கேட்டதுள்ளார்.

இதை தங்கை தர மறுத்ததை அடுத்து அவர்களை வீட்டு காலி செய்ய அண்ணன் பழனிக்குமார் வற்புறுத்தியதாகவும் அதற்கு மகாலட்சுமி அக்கா சுந்தரமாலிடம் வாங்கிய 80 ஆயிரம் பணத்தை கொடுத்தால் தான் வீட்டை காலி செய்வதாக கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழனிக்குமார் சென்னையில் இருந்து பழனிக்குமார் சிவக்குமார் என்பவரிடம் ஊருக்கு வந்து தங்கை என்று பாராமல் சுந்தராம்பாள் மற்றும் மகாலட்சுமி தாக்கியுள்ளார்.

இதனால் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து ஒரு நடவடிக்கை எடுக்க கோரி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News