இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த மரும நபர்கள் மீது வழக்கு பதிவு

இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த மரும நபர்கள் மீது வழக்கு பதிவு

Update: 2024-07-04 05:42 GMT
சிவகாசி அருகே வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்த மைக்கேல் என்பவர் தனது வீட்டில் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை 1.45 மணிக்கு மர்ம நபர்கள் அங்க நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவினர் தீ பற்றி எரிந்த டூவீலரில் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீயில் வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து மைக்கேல் அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் டூவீலர் எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News