மின்கம்பத்தில் மின்சார வயர் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலை
பாகனேரியில் மின் கம்பத்திலிருந்து மின்சார வயரை திருடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது;
Update: 2023-10-28 04:39 GMT
மதகுபட்டி காவல்நிலையம்
சிவகங்கை மாவட்டம், பாகனேரியில் அடையாளம் தெரியாத சிலர் பாகனேரி அரசு பள்ளி அருகே உள்ள மின்சார கம்பத்திலிருந்து அரசு பள்ளியின் புதிய கட்டிடம் வரை செல்லும் 160 மீட்டர் மின்சார வயரை திருடி சென்றதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் மதகுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத திருடர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்