ராஜபாளையத்தில் சந்திரன் என்பவரை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு

ராஜபாளையத்தில் சந்திரன் என்பவரை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-06-15 15:34 GMT

காவல் நிலையம் 

 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செங்குட்டுவன் தெருவை சார்ந்தவர் சந்திரன் வயது 43 இவர் சத்திரப்பட்டி மேம்பாலத்தின் கீழ் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த பொழுது அங்கு இருந்த சுதாகர் மற்றும் அவருடைய நண்பர் இருவரும் சேர்ந்து சந்திரனை தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

காயம் அடைந்த சந்திரன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags:    

Similar News