மகளை பார்க்க சென்ற தந்தை மீது தாக்குதல் 22 பேர் மீது வழக்கு  !

மணவாளக்குறிச்சியில் மகளை பார்க்க சென்ற தந்தை மீது தாக்குதல் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-06-15 04:40 GMT

வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி சகாய மாதா காலனியை சேர்ந்தவர் வினி கால்டன் (40). கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பிருந்தா (38). இந்த தம்பதிக்கு ஒரு மகள், 2 மகன்களும் உள்ளனர். தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிருந்தா கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். உடன் தனது மகளை அழைத்து சென்றுள்ளார்.

மகள் தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டு மகன்களும் தந்தை வினிகால்டனுடன் உள்ளனர்.         கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்த நாள் முதல் வினி கால்டன் மகளைக் காண முயற்சித்து வருகிறார். கடந்த 11ஆம் தேதி மகளைக் காண பள்ளிக்கூடம் அருகில்  நிற்கும் போது , மகளை அழைத்துச் செல்ல பிருந்தாவின் உறவினர்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.  

 பின்னர் பிருந்தாவின் உறவினர்கள் மணவாள குறிச்சியில் சென்று வினிகால்டனின் வீடுபுகுந்து, வினிகால்டன் அவருடன் இருந்த சகாய வினோ,வில்சன்,  ஜான்சன் ஆகியோரை சரமாரியாக தாக்கி, வினிகால்டனிடம் இருந்து செல்போன், ரொக்க பணம் ரூ.  1500 போன்றவற்றை சென்றனர்.

இதில் இருதரப்பினுடைய கடும் மோதல் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த வினிகால்டன்,  சகாய வினோ, வில்சன், ஜான்சன் ஆகியோர் ஆசாரிப்பள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், இந்த சம்பவம் குறித்து தனித்தனியாக மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர்.  போலீசார் இரு தரப்பை  சேர்ந்த 22 பேர் மீது வழக்கு பகுதி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News