கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்கு
லோன் பெறுவதற்காக ஜாமின் கையெழுத்து போட்ட நபர் சம்மன் பற்றி கேட்ட நிலையில் கொலை மிரட்டல் விடுத்த தம்பதி.;
By : King 24x7 Angel
Update: 2024-02-21 04:59 GMT
கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்கு
கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் சந்திரன்,64; ஏமப்பேரை சேர்ந்த பாலசுந்தரம் மகன் பார்த்திபன் என்பவர் தனியார் நிறுவனத்தில் லோன் பெறுவதற்காக சந்திரன் ஜாமின் கையெழுத்து போட்டுள்ளார். இந்நிலையில் லோன் சரியாக கட்டாததால், லோன் வழங்கிய நிறுவனம் நீதிமன்றம் மூலம் சந்திரனுக்கு சம்மன் அனுப்பியது. கடந்த 2ம் தேதி சந்திரன் ஏமப்பேரில் உள்ள பார்த்திபன் வீட்டிற்கு சென்று சம்மன் குறித்து கேட்டுள்ளார். அப்போது, பார்த்திபனும் மற்றும் அவரது மனைவி யோகராணியும் சந்திரனை அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.