சிவகங்கை அருகே சிறுமியை கற்பமாக்கிய இளைஞர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 9 மாதம் கற்பமாக்கிய இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-01-14 09:35 GMT

காவல் நிலையம் 

சிவகங்கை அருகே சேந்தி உடையநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அழகுசுந்தரம் மகன் பாலமுருகன்(25). இவருக்கு அருகில் உள்ள ஊரை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை 9 மாதம் கற்பமாக்கிய நிலையில் அச்சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் இன்று பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News