சேலம் மத்திய சிறையில் கழிவுநீர் தொட்டிக்குள் கிடந்த செல்போன் !

சேலம் மத்திய சிறையில் கழிவுநீர் தொட்டிக்குள் கிடந்த செல்போன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-16 05:34 GMT

சேலம்

சேலம் மத்திய சிறையில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் தொட்டி உள்ளது. சிறை போலீசார் நேற்று 'பி' பிளாக் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு உள்ள ஒரு கழிவுநீர் தொட்டியில் சிறிய செல்போன் கிடப்பது தெரிய வந்தது. அந்த செல்போனை போலீசார் மீட்டனர். பின்னர் அந்த செல்போனை பயன்படுத்திய கைதி யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News