ராசிபுரத்தில் நள்ளிரவில் வீசிய சூறைக்காற்றில் கோழி செட் விழுந்து சேதம்

ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் நள்ளிரவில் வீசிய சூறைக்காற்றுக்கு ரூ.3.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கோழி செட் விழுந்து சேதமானது.

Update: 2024-06-01 12:43 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (47). விவசாயியான இவர் தனது நிலத்தில். ரூ.3.60 லட்சம் மதிப்பில் கீற்று மற்றும் தகரம் கொண்டு கோழி செட் அமைந்திருந்தார். இந்த நிலையில், பட்டணம் பகுதியில் நேற்று நள்ளிரவில் வீசிய சூறைக்காற்றுக்கு கோழி செட் பெயர்ந்து கீழே விழுந்த, முற்றிலும் சேதமானது. விவசாய கடன் வாங்கி செட் அமைத்துள்ள நிலையில், சூறைக்காற்றுக்கு ஒரு சில நொடியில் சரிந்து விழுந்ததால், கவலை அடைந்துள்ள விவசாயி கனகராஜ் தேர்தல் முடிவுக்கு பின்னர் தமிழக அரசு உரிய இழப்பீடு கிடைக்க வேண்டுமா? என கோரிக்கை விடுத்தார். கடந்த 2 நாட்களாக பகலில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நள்ளிரவில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது..
Tags:    

Similar News