3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து

நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்தினை மோகன் சி.லாசரஸ் வழங்கினார்.

Update: 2023-12-26 06:15 GMT

கிறிஸ்துமஸ் விருந்து 

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடார வளாகத்தில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் ஏழை எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்குவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமை வகித்து ஜெபித்து கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  இதில் நாலுமாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் சுமார் 3‌ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர். 

Tags:    

Similar News