விருதுநகரில் கல்லூரி ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு

விருதுநகரில் பைக்கில் சென்ற கல்லூரி ஊழியரை தாக்கிவிட்டு அவரிடம் இந்த செல்போன் பறித்த மூவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-15 13:53 GMT
காவல் நிலையம் 

விருதுநகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி ஊழியரை தாக்கிவிட்டு அவரிடம் இந்த செல்போன் பறித்த மூவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி காவல் நிலையத்தில் புகார் விருதுநகர் பாண்டியன்நகர் ரோசல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருண் வயது 46 இவர் விருதுநகரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 15 வருடமாக எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த இவர் கடந்த பன்னிரண்டாம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக ரங்கநாதபுரம் அய்யா கோவில் வழியாக இரவு 10:30 மணியளவில் சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத மூவர் அவரை வழிமறித்து கீழே தள்ளிவிட்டு அவர் செல்போனை பறித்து அவரை கையில் இருந்து ஆயுதத்தால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி உடையதாக கூறப்படுகிறது.

இத அடுத்து காயமடைந்த அவர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். புகார் அடிப்படையில் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News