ரயிலிலிருந்து விழுந்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு !

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Update: 2024-03-05 06:53 GMT

கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்த மணப்பாறைப்பட்டி மணிகண்டன் நகரைச் சோ்ந்த மோகன்ராஜ் மகன் அஸ்வின்சா்மா(18). இவா், திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். இவா், திங்கள்கிழமை வழக்கம்போல மணப்பாறையிலிருந்து ரயிலில் திருச்சி நோக்கி சென்றாா். இந்த ரயில் பெரிய ஆலம்பட்டி பகுதியில் வந்தபோது கதவின் அருகே நின்ற அஸ்வின்சா்மா தவறி கீழே விழுந்தாா். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு காயமடைந்த அஸ்வின்சா்மாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அஸ்வின்சா்மா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தடனா். இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Tags:    

Similar News