கெங்கவல்லி அருகே பசு மாடு உயிருடன் மீட்பு !

கெங்கவல்லி அருகே பசுமாடு நிலை தடுமாறி 80 அடி ஆழம் 10,அடி தண்ணீரில் தவறி விழுந்த நிலையில் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

Update: 2024-04-26 11:43 GMT

 மாடு  மீட்பு

சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி காட்டுக்கோட்டை பகுதியில் வசிப்பவர் பழனிவேல் இவருடைய விவசாய தோட்டத்தில் இன்று இவருடைய பசுமாடு நிலை தடுமாறி 80 அடி ஆழம் 10,அடி தண்ணீரில் தவறி விழுந்துள்ளது. உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் நிலை அலுவலர் செல்ல பாண்டியன் தலைமையில் விரைந்து வந்து கிணற்றில் விழுந்து கிடந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News