பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள் கூட்டம் !

தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

Update: 2024-04-22 05:55 GMT

தர்மபுரி 

தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் இன்று காலை 4 மணி முதல் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது தேர்தல் விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என அனைவரும் தர்மபுரிக்கு திரும்பினர் நேற்றுடன் விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று காலை 4 மணி முதல் அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் என பலரும் அதிகாலை முதலில பேருந்துக்காக காத்திருந்தனர். குறிப்பாக சேலம் சென்னை திருப்பத்தூர் பெங்களூர் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
Tags:    

Similar News