கூரை வீடு எரிந்து சேதம்!

திருவண்ணாமலையில் சிலிண்டர் வெடித்து கூரை வீடு சேதம் அடைந்தது.

Update: 2024-03-30 04:54 GMT

தீ விபத்து

திருவண்ணாமலை தாலுகா கெடாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனியன் கூரை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.அக்கம்பக்கத்தினர் வீட்டை திறக்க முயன்றபோது கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது. இதனால் கூரை வீடு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.இது குறித்து தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News