குப்பை கிடங்கின் ஒருபகுதியில் தீ விபத்து!

இலுப்பூர் பேரூராட்சியில் குப்பை கிடங்கின் ஒருபகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-03-09 07:29 GMT
புதுகோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் சித்திரைக்குளம் குப்பை கிடங்கில் மலை போன்று குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குப்பை கிடங்கில் இன்று அதிகாலை குப்பை கிடங்கின் ஒருபகுதியில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தண்ணீரை கொண்டு தீயை அணைத்தனர்.
Tags:    

Similar News