வீரகனூர் அருகே மின்கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து

சேலம் மாவட்டம், திட்டச்சேரி அருகே குடிசைவீட்டில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-27 11:53 GMT

தீ விபத்து

வீரகனூர் அருகே திட்டச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மயில்வாணன். இவரது குடிசை வீட்டில் மனைவி பாலாயி, மருமகள் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 3மணியவில், மயில் வாணன் குடிசை வீட்டில் மின் கசிவினால் திடீரென தீப்பிடித்தது. இதைபார்த்த அருகில் வசிப்பவர்கள். கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்த னர். இதையடுத்து நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையில் வந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் குடிசை வீட்டில் இருந்த பொருட்கள் அணைத்தும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து வீரக னூர் போலீசார் விசாரிக்கின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, வருவாய் துறையினர் நேரில் ஆய்வு செய்து, நிவாரண தொகை கிடைப்பதற்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Tags:    

Similar News