தோல் ஆலையில் தீ விபத்து

பூந்தமல்லி அருகே தோல் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-07 12:20 GMT

தீ விபத்து

பூந்தமல்லி அருகே, சென்னீர்குப்பம் பகுதியில் கே.எச்.எக்ஸ்போர்ட் என்ற பெயரில், தனியார் தோல் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஷூ, பேக், பெல்ட் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலையின் மாடியில் உள்ள கிடங்கில், நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் அனைவரும், காயமின்றி பாதுகாப்பாக வெளியேறினர். பூந்தமல்லி, ஆவடி, அம்பத்துார் ஆகிய தீயணைப்பு நிலையத்தில் இருந்து, நான்கு தீயணைப்பு வாகனங்கள் வந்தன. வீரர்களை, தண்ணீரை பீச்சியடித்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயால் கரும்புகை வெளியேறி, தொழிற்சாலை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகினனர். மின் கசிவு காரணமாக தீ பற்றியதா அல்லது வேறு காரணமா என, பூந்தமல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News