பெண்ணின் தலையில் விழுந்து வெடித்து சிதறிய பட்டாசு

கன்னியாகுமரியில் ஒரு கோவில் விழாவில் வைக்கப்பட்ட பட்டாசுகள் பெண்ணின் தலையில் விழுந்து வெடித்து சிதறின.

Update: 2024-05-24 07:53 GMT

கன்னியாகுமரியில் ஒரு கோவில் விழாவில் வைக்கப்பட்ட பட்டாசுகள் பெண்ணின் தலையில் விழுந்து வெடித்து சிதறின.


கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடத்தில் ஒரு கோவில் கொடை விழா நடைபெற்றது. விழாவில் வாணவேடிக்கையுடன் சாமி ஊர்வலம் நடந்தது. இந்த திருவிழாவை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.       இதில் அதே ஊரை சேர்ந்த 48 வயது பெண்ணும் திருவிழாவை காண வந்திருந்தார். அப்போது வாணவேடிக்கையில் வானத்தை நோக்கி விடப்பட்ட ஒரு பட்டாசு திடீரென அருகில் உள்ள மரத்தின் மீது பாய்ந்து, பின்னர் அந்த பட்டாசு மரத்தின் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த 48 வயது பெண் தலை மீது விழுந்து வெடித்து சிதறியது.        இதில் அந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கு நின்றவர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News