பெண்கள் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது

ஆவரங்காடு கிருஷ்ணவேணி பெண்கள் பள்ளியில் விலை இல்லா சைக்கிள் 305 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது

Update: 2024-01-03 11:31 GMT

விலையில்லா சைக்கிள் 

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும், அரசு பள்ளியில் கல்வி பயிலும் தொலைதூரங்களிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவியருக்கு அவர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில், விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது . இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கல்வி பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் சுமார் 305 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.. நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி தலைமை தாங்கினார்.. மேலும் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.. மேலும் மாவட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி அவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. விழா நிறைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
Tags:    

Similar News