நீதிமன்ற வளாகத்தில் பிடிபட்ட கட்டுவிரியன் பாம்பு !!!

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 5 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டது.

Update: 2024-06-01 07:07 GMT

பாம்பு

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பிடிபட்ட 5 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற கிழக்கு நுழைவாயில் பகுதியில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் அங்கு சென்ற தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி சுமார் 5 அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

Tags:    

Similar News