உறவினர் வீட்டிற்கு வந்திருந்த சிறுமி விபத்தில் பலி - போலீசார் விசாரணை
சென்னையிலிருந்து சிவகங்கைக்கு உறவினர் வீட்டிற்கு வந்திருந்த சிறுமி விபத்தில் பலியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-03 06:10 GMT
வழக்குப் பதிவு
சென்னை மணலி பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் மகன் தன்சிகா (10). பள்ளி விடுமுறையை முன்னிட்டு, இவா் சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகில் உள்ள தனது மாமா நாகராஜ் வீட்டுக்கு வந்தாா்.
இந்த நிலையில், தன்சிகா மாமா வீட்டிலிருந்து உறவினா் ஹரிணியுடன் இரு சக்கர வாகனத்தில் கடைக்குச் சென்றாா். வாகனத்தை ஹரிணி (19) ஓட்டினாா்.
கடைக்குச் சென்று விட்டு திரும்பி வந்தபோது, ஆயுதப்படை குடியிருப்பு சாலையில் எதிரே வந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து இருந்த சிறுமி தன்சிகா கீழே விழுந்தபோது, லாரியின் பின்பக்க டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.