நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கிய முகநூல் நண்பர்கள் குழு !
முகநூல் நண்பர்கள் குழு சார்பில் நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
Update: 2024-04-05 06:17 GMT
நரிக்குறவர்
நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நேற்று (ஏப்.4) இரவு முகநூல் நண்பர்கள் குழு சார்பில் உணவு வழங்கப்பட்டது. இதனை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் நேரடியாக சென்று நரிக்குறவர் மக்களிடம் உணவு வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.