மின் கம்பியில் உரசியதில் தீப்பற்றி எரிந்த வைக்கோல் லாரி. ...

சிவகாசி அருகே மின் கம்பியில் உரசியதில் தீப்பற்றி எரிந்த வைக்கோல் லாரி தீயணைப்புத் வீரர்கள் தீயை அணைத்தனர்.

Update: 2024-07-04 06:11 GMT

தீ

சிவகாசி அருகே மின் கம்பியில் உரசியதில் தீப்பற்றி எரிந்த வைக்கோல் லாரி.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே தெற்கு குப்பனாபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் குமார். இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். குமார் தனது லாரியில் எஸ்.புதுப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான வைக்கோலை ஏற்றி வந்தார்.

பூவநாதபுரம் அருகே லாரி வந்த போது மின் கம்பியில் வைக்கோல் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக லாரியில் இருந்த வைக்கோலை கீழே தள்ளி விட்டதால் லாரிக்கு சேதம் ஏற்படவில்லை.தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் வீரர்கள் தீயை அணைத்தனர். பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து சேதமானது.விபத்து குறித்து மல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News