இருசக்கர வாகனத்தில் பாண்டி மது பாட்டில்களை கடத்தி வந்தவர் கைது

நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் பாண்டி மது பாட்டில்களை கடத்தி வந்தவர் கைது

Update: 2024-02-17 06:52 GMT

கைது

நாகை மாவட்டத்தில் சாராய கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 15 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நாகை நகர போலீசார் புத்தூர் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை மரித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்தி விசாரணையில் மதுபற்றுநிலை கடத்தி வந்தது நாகை காடம்பாடி பகுதியில் சேர்ந்த சலீம்ரைக்காயின் மகன் யாசுதீன் வயது 34 என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக யாசுதீனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கார்த்தி வரப்பட்ட 90 எம்எல் அளவு கொண்ட 30 பாண்டி மது மது பாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News