மது போதையில் மாமியார் வீட்டுக்கு சென்றவர் உயிரிழப்பு

மது போதையில் மாமியார் வீட்டுக்கு சென்றவர் உயிரிழந்ததை அடுத்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-13 14:08 GMT
மது போதையில் மாமியார் வீட்டுக்கு சென்றவர் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள சீரங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமச்சந்திரன் வயது 33. இவர் மே 12ஆம் தேதி மதியம் 12 மணி அளவில், கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, தூளிப்பட்டி பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று உள்ளார். அதன் பிறகு அப்பகுதியில் உள்ள மூர்த்தி என்பவரது தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் பாலவிடுதி கிராம நிர்வாக அலுவலர் தங்கதுரைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்தில் வந்து ராமச்சந்திரன் உயிரிழந்தது கண்டு உறுதி செய்த அவர், இது குறித்து பாலவிடுதி காவல்துறையினருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த ராமச்சந்திரனின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாலவிடுதி காவல்துறையினர்.
Tags:    

Similar News