பொது சுகாதாரத் துறையினருக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் !

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதாரத் துறையினருக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-07-06 04:38 GMT

மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதாரத் துறையினருக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், கட்டடப்பணிகள், நடப்போம் நலம் பெறுவோம், புகையிலை கட்டுப்பாடு, கலைஞரின் கண்ணொளி காப்போம் திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், பள்ளி சிறார் நல்வாழ்வு திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வுகள் மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பிரதாப்குமார், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.மாரிமுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வளவன் மற்றும் அரசு மருத்துவர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News