சேலத்தில் சாலையோரம் நிறுத்தி இருந்த பைக் திருட்டு

சேலத்தில் சாலையோரம் நிறுத்தி இருந்த பைக்கை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-07-02 09:21 GMT

கோப்பு படம் 

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 21). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சேலம் வந்தார். பின்னர் 5 ரோடு பகுதியில் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அருகில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்த்தார். பின்னர் படம் முடிந்து வந்து பார்த்த போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரிந்தது.

இது குறித்து அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பின்னர் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையன் குறித்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது 5 ரோடு பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

 அப்போது அவர் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த மது என்பவருடைய மகன் முருகன் (24) என்பது தெரிந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது மோட்டார் சைக்கிள் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News