திடீரென வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் அப்பகுதியில் பரபரப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே திடீரென வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் அப்பகுதியில் பரபரப்பு

Update: 2024-02-23 06:23 GMT

மர்ம பொருள்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சிறிய அளவிலான மர்ம பொருள் ஒன்று கீழே விழுந்துள்ளது. அதில் சிகப்பு நிற மின் விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் கிராம மக்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம் திட்டச்சேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த திட்டச்சேரி காவல் துறையினர் அந்த சிறிய அளவிலான கருவியை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில் அப்பொருள் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான கருவி என்றும் வானிலை ஆராய்ச்சிக்காக தொடர்ந்து அனுப்பப்படும் கருவி எனவும் தெரிய வந்துள்ளது.மேலும் அந்த கருவியால் எந்த விதமான பாதிப்பும் இல்லை என கூறிய போலீசார் அந்த கருவியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.இரவில் வானில் இருந்து திடீரென மர்ம பொருள் விழுந்ததை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.
Tags:    

Similar News