சிவகாசி அருகே ஒருவர் கைது

சிவகாசி அருகே பட்டாசு தயாரிக்க பயன்படும் வேதி பொருட்களை பதுக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-22 13:39 GMT
சிவகாசி அருகே பட்டாசு தயாரிக்க பயன்படும் வேதி பொருட்களை பதுக்கிய நபர் கைது...
 சிவகாசி அருகே பட்டாசு தயாரிக்க தேவையான மூலப் பொருட்களை பதுக்கிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை.சிவகாசி கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் நாராணபுரம் தனியார் பள்ளி எதிரே உள்ள கடையில் சுந்தரேசன்(53) என்பவரின் கடையில் சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி பட்டாசு உற்பத்திக்குத் தேவையான வெடி உப்பு, அலுமினிய பவுடர் உள்ளிட்ட மூலப் பொருட்களை பதுக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சுந்தரேசனை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News