உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை
விராலிமலை அருகே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபர் பலியானார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-15 15:09 GMT
கோப்பு படம்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அன்னவாசல் இந்திரா நகரில் வசிப்பவர் ராமச்சந்திரன் வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக உடல் மீது மண்ணென்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.இந்த நிலையில் அன்னவாசல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்தியதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.