கோட்டைமேட்டில் வீட்டின் பின்புறம் மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

கோட்டைமேட்டில் வீட்டின் பின்புறம் மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.;

Update: 2024-07-15 06:41 GMT
  • whatsapp icon
கோட்டைமேட்டில் வீட்டின் பின்புறம் மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது. கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அனுமதி இன்றி மது விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூலை 12ஆம் தேதி காலை 9:45- மணியளவில், வாங்கல், கோட்டைமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பழனி மகன் சந்திரன் வயது 40 என்பவர், அவரது வீட்டின் பின்புறம் வைத்து மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மது விற்பனையில் ஈடுபட்ட சந்திரனை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 4- குவாட்டர் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல் துறையினர்.
Tags:    

Similar News