வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு !!!

வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.;

Update: 2024-05-11 12:26 GMT

காவல்துறை

வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி, அஜிஸ் சாய்பு தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஷீத் மகன் ஆரிப்அலி வயது 57. கடந்த பல வருடங்களாகவே இவருக்கு வலிப்பு நோய் உள்ளது.

இதனால் அடிக்கடி அவருக்கு வலிப்பு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் மே 9-ம் தேதி மதியம் 2 மணி அளவில், பள்ளப்பட்டி அருகே உள்ள ரெங்கராஜ் நகர் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீரென மீண்டும் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டடு மயங்கி கீழே விழுந்தார்.

Advertisement

உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அறிந்த ஆரிப் அலி மனைவி சர்மிளா வயது 47 என்பவர், இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த ஆரிப் அலி உடலை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவகிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags:    

Similar News