விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது !
கள்ள சந்தையில் விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-22 07:04 GMT
கைது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் போலீசார் திருவள்ளூர் ரோடு, காந்தி ரோடு, ரெயில் நிலையம், பஜார் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவள்ளூர் ரோடு சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர், அரக்கோணம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பழனி (வயது 50) என்றும், விற்பனைக்காக மது பாட்டில்களை சுடுகாடு பகுதியில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களை டவுன் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.