திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வாலிரிடம் செல்போன் பறித்தவர் கைது!

பல்லடத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்தவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-05-28 11:12 GMT

கைது

பல்லடத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்தவர் கைது. பல்லடம் ஜே கே ஜே காலனி பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 24)இவர் நேற்று பல்லடம் கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர் ஒருவர் இவரின் கையில் வைத்திருந்த செல்ஃபோனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதையடுத்து குமாரசாமி பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் போலீசார் வடுகபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் ஒருவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.இதையடுத்து அவரை போலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் அவர் பல்லடம் மாணிக்காமல் கோல்டன் சிட்டி நகரை சேர்ந்த அசாருதீன்( 26) என்பதும் செல்போன் வழிபறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதை அடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News