அத்துமீறி புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது

குமாரபாளையத்தில் அத்துமீறி புகையிலை பொருட்களை விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-01-18 13:34 GMT

குமாரபாளையத்தில் அத்துமீறி புகையிலை பொருட்களை விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அரசு அனுமதி இல்லாமல் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.  சந்தியா,  உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். பள்ளிபாளையம் பிரிவு அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் கடையில் விற்பனை செய்து கொண்டிருந்த கந்தசாமி, 70, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஐந்து புகையிலை பொருட்கள் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News