பெட்ரோல் டேங்க் வெடித்து ஒருவர் படுகாயம்

அரூரில் பைக் ஸ்டாண்டில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-05-28 13:08 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த முத்தானூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள பைக் ஸ்டேண்ட் ஒன்றில் தனது இருச்சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இரண்டு நாள் கழித்து தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க சென்றுள்ளார். அப்போது, பைக்கில் பெட்ரோல் இல்லாததால் பெட்ரோல் வாங்கி வந்து வாகனத்தில் ஊற்றி, வாகனத்தை இயக்கி உள்ளார். அப்போது, எதிர்பாரதவிதமாக இவருடைய வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்ததில் ராஜ்குமாரின் உடலில் வயிற்று பகுதி மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த ராஜ்குமார் பைக் ஸ்டாண்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்ததால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பைக் ஸ்டாண்டில் விடப்பட்ட இருசக்கர வாகனத்தை இயக்கும் பொழுது பெட்ரோல் டேங்க் வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News