இந்து சமய அறநிலைக்கு சொந்தமான இடத்தில் மர்ம நபர்கள் தீவைப்பு !

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரில் இந்து சமய அறநிலைக்கு சொந்தமான இடத்தில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Update: 2024-03-15 06:08 GMT

 தீ

பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் மேற்கு தெருவில் இந்து சமய அறநிலையை துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் நேற்று முன்தினம் மாலை மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் இரவு 10 மணிக்கு மேல் அப்பகுதியில் அணைக்கப்படாமல் இருந்த தீப்பொறிகள் பரவி பெருமளவில் தீப்பிடித்தது. அந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்க முடியவில்லை. பின்னர் தகவலறிந்து அங்கு வந்த. பொதுமக்கள் 101 க்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி மீண்டும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்ட போது தீ கொழுந்து விட்டு இருந்து கொண்டிருந்தது. பின்னர் தீயணைப்புத் துறையினர் ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் மண்ணை போட்டு மூடி இரண்டு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து பொத்தனூர் பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சம்பவ இடத்தில் இந்து சமய அறநிலையத் துறையினர் போலீசார்  மட்டுமே இருந்தனர்.
Tags:    

Similar News