திடீர் சூறைக்காற்றால் முறிந்து விழுந்த மின் கம்பம்

தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் தென்னை மரம் சாய்ந்து மின் கம்பம் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2024-07-01 05:05 GMT
தேவூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று  மாலை இடி மின்னலுடன் பலத்த சூறாவளிக்காற்று வீசி மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள கரும்புகள் உள்ளிட்ட பயிர்கள் சாய்ந்தது,மேலும் தேவூரிலிருந்து சங்ககிரி செல்லும் பிரதான சாலையான அம்மாபாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த தென்னை மரம் மின் கம்பி மீது சாய்ந்தது அப்போது மின் கம்பமும் உடைந்து நடுரோட்டில் சாய்ந்தது. இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்,
Tags:    

Similar News