விவசாய கிணற்றில் விழுந்த கர்ப்பிணி பெண் உயிருடன் மீட்பு

Update: 2023-11-01 02:54 GMT
மீட்பு பணி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள தீவட்டிப்பட்டி ஊராட்சி வேடப்பன்காடு பகுதியில் வசிக்கும் முத்து மகன் ராஜி என்பவருடைய விவசாய கிணற்றில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நூலள்ளி அருகே உள்ள ரெட்டியூர் பகுதியை சேர்ந்த தென்னரசு என்பவருடைய மனைவி கர்ப்பிணி பெண் சித்ரா (26) என்பவர் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். கர்ப்பிணி பெண் தவறி கிணற்றில் விழுந்த தகவல் அறிந்த காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து விவசாய கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை  உயிருடன் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். காடையாம்பட்டி அருகே விவசாய கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News