குமாரபாளையத்தில் விபத்தை ஏற்படுத்திய தனியார் கல்லூரி ஓட்டுனர்
குமாரபாளையத்தில் மதுபோதையில் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனர் தடுப்பு சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்.;
மதுபோதையில் சாலையின் நடுவே அமர்ந்து இருக்கும் ஓட்டுனர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் பேருந்தினை அதன் ஓட்டுனர் வெங்கடாஜலம் என்பவர், ஈரோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளை அழைத்துச் செல்வதற்காக வாகனத்தை எடுத்து வந்தவர்.
மாணவ-மாணவிகளை அழைத்து வராமல் அளவுக்கு மீறி மது அருந்தி இருந்ததால், மது மயக்கத்தால் வாகனத்தை இயக்கியதில் சாலைகளில் உள்ள தடுப்பு சுவர்களின் மீது மோதி வாகனம் சேதமடைந்துள்ளது.
மேலும் பள்ளிபாளையம் பகுதியில் தற்போது மேம்பாலம் கட்டும் பணிக்காக சாலைகள் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. மது மயக்கத்தில் இதனை அறியாமல் ஒருவழி சாலையில் இயக்கியதுடன், பேருந்தினை பெட்ரோல் நிலையத்தில் உள்ள பக்கவாட்டுச் சுவர்களின் மோதி சேதப்படுத்தியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக பேருந்தினுள் ஏறி வாகனத்தை நிறுத்தினர்.
இதனால் அவர்களிடம் மது மயக்கத்தில் இருந்த ஓட்டுனர் வெங்கடாஜலம் தகராறில் ஈடுபட்டார். மேலும் பொதுமக்கள் அவரை விசாரணை மேற் கொள்கையில் பார்த்துக்கொள்ளலாம் பார்த்துக்கொள்ளலாம் என்று உளறிக் கொண்டே வாகனத்தை விட்டு இருந்து கீழே இறங்கியவர் சாலை நடுவே அமர்ந்து கொண்டார்.
அவருக்கு பாதுகாப்பு இல்லை என கருதிய பொதுமக்கள் அவரை பேருந்தின் இருக்கையில படுக்க வைத்தனர். ஓட்டுனரின் மது மயக்கத்தால் வாகனம் சாலையின் நடுவே விபத்து ஏற்படுத்தும் வகையில் ஒட்டியது பெரும் அச்சத்தை பொதுமக்கள் இடையே ஏற்படுத்தி உள்ளது.