ஊனமுற்றோருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி !
கடலூரில் ஊனமுற்றோருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Update: 2024-03-14 06:49 GMT
கடலூர் மாநகரம் St. Joseph's பள்ளியில் நடைபெற்ற விவசாயிகளுக்கு மானிய விலையில் டாக்டர் மற்றும் ஊனமுற்றோர் இரு சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் ஆகியோர் வழங்கினர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. அய்யப்பன், கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கடலூர் மாநகர செயலாளர் கே எஸ் ராஜா, போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.