ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தள்ளுமுள்ளு

பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது, பணியாளர்களுக்கும், கடைக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2024-01-06 06:41 GMT
பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம் காட்ட வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அக்கறை இல்லை என மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தினரை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இது உத்தரவிட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தினர். பழனி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது, பணியாளர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பல கடற்கரையில் கண்ணீருடன் அழுகையில் ஈடுபட்டனர். கோர்ட்டு உத்தரவுப்படிதான் நாங்கள் அகற்றுகிறோம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றனர்.
Tags:    

Similar News