ஆ.இராசா வின் மனைவியின்  நினைவு நாள், திமுகவினர் அஞ்சலி

தி.மு.க.துணை பொதுச்செயலாளர், ஆ.இராசா வின் மனைவியின்  நினைவு நாளன்று, திமுக நிர்வாகிகள் பலர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

Update: 2024-05-30 02:47 GMT

தி.மு.க.துணை பொதுச்செயலாளர், ஆ.இராசா வின் மனைவி மறைந்த  பரமேஸ்வரியின் 3-ஆம் ஆண்டு நினைவு நாள், அவரது நினைவிடத்தில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் பலர் மலரஞ்சலி செலுத்தினார்கள்...... பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்த, திமுகதுணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா -வின் மனைவி பரமேஸ்வரியின் 3 - ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வேலூர் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவரது மகள் மயூரி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.சி.சிவசங்கர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் . துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் இதில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர், ரிஷிவந்தியம்சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் , கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, மற்றும் பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன்,  திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News