தூசி அருகே மணல் கடத்தல்!

தூசி அருகே மணல் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-15 12:31 GMT
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காஞ்சீபுரம் மாவட்டம் சின்ன அய்யங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் லாரியில் மணல் கடத்தி வந்தார். பல்லாவரம் நத்தைகொல்லை கிராமத்தில் லாரி மின் கம்பத்தில் மோதியது. இதனால் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர் .மேலும் தப்பி ஓடிய ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News