திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2024-06-15 11:20 GMT

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.


விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறுநலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக வரும் 18-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்கும் தொடா்புத் துறைகளை ஒருங்கிணைத்து திருநங்கையருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இம்முகாமில், அடையாள அட்டை வழங்குதல், ஆதாா் அட்டையில் திருத்தம், வாக்காளா் அட்டை, முதலமைச்சா் மருத்துவ காப்பீடுதிட்டம், ஆயுஷ் மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து திருநங்கையரும் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியா் ச.அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.
Tags:    

Similar News